மகனின் பசியைப் பல மைல்கள் தூரத்தில் கூட அறியும் அன்பான , அழகான அம்மாவாக , பார்வை இழந்த போதும் பரவசத்தோடு பேரனை பார்த்துக்கொள்ளும் பாட்டியாக , அன்பைக் கூட அதட்டியும் அடித்துச் சொல்லும் அக்காவாக , தன்னிகரில்லா பாசத்தை அள்ளிக் கொடுக்கும் அன்பு தங்கையாக , கெட்டதை விட்டுவிட்டு நல்லதை மட்டுமே நன்றாக சொல்லிக்கொடுக்கும் நல்ல நண்பியாக , கனவுகளை நனவாக்கும் வகையில் கண்ணைக் காக்கும் இமையைப்போல் அமையும்...
காதல் நதியில் கரையைக் கடக்க வழியின்றி, கடல் அலைகளால் பாதங்களை மட்டும் நினைத்து விட்டு . என் கண்ணிரால் கடல் நீர் அனைத்தையும் உப்பாக மாற்றி விட்டு , கண்ணை துடைத்துக் கொண்டு கலக்கமின்றி கல்லறைக்கு சென்றேனடி உன் நினைவோடு ...... சிறகடித்து பறக்கும் சிறு பட்டாம்பூச்சியாய் உன்னை கண்டேனடி , கண்ட மறு நொடியே வண்ண மலராய் மலர்ந்தேனடி. அப்பொழுதாவது என்னை நெருங்கி வருவாய் என மனகணவு கண்டேன்.... கண்ணழகியே , உன் கண்களைக் காணாமல் காலைப்பொழுதொ விடியவில்லையடி , உதவிக்கு அழைக்கிறேன் சூரிய கதிர்களை , உன் கண்களைத் திறக்க திறவுகோலாக . . . கிடைக்கும் என்று நம்பிய நாட்களை விட , கிடைக்காது என தெரிந்தும் விரும்பிய நாட்களே அதிகம்...
Comments
Post a Comment